என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தம்
Byமாலை மலர்7 Sep 2018 7:30 AM GMT (Updated: 7 Sep 2018 7:30 AM GMT)
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்டதால் இன்று கர்நாடகா, தனது அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை முற்றிலுமாக நிறுத்தியது. #Karnatakadam #Cauvery
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த மாதம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து சுமார் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரும் வகையில் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த 2 மாதங்களாக 120 அடி என்ற முழு கொள்ளளவில் இருந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நீர் திறப்பை கர்நாடகா குறைத்தது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்டதால் இன்று கர்நாடகா, தனது அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பை முற்றிலுமாக நிறுத்தி விட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை ஆகியவற்றில் இருந்து இன்று ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறவில்லை.
தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியுள்ளது. இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து சுமார் 6800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. #Karnatakadam #Cauvery
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X