search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் - அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை
    X

    அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் - அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை

    அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என மத்திய இந்தி குழுவின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். #Hindi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், மத்திய இந்தி குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசு விவகாரங்களில் இந்தி மொழியின் பயன்பாட்டை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும். அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது, சிக்கலான, தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த வேண்டும். அரசில் இந்தியின் பயன்பாட்டுக்கும், சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் உதவலாம். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்” என்றார். #Hindi #PMModi

    Next Story
    ×