search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண் - கணவர் கைது
    X

    வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண் - கணவர் கைது

    வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 21 வயது இளம் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜோகியாகேடா என்ற கிராமத்தில் உள்ள சமேதீன் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டார் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என  கூறப்படுகிறது. இதனால், மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை தினம் தினம் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மாப்பிள்ளையின் சகோதரிகளால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இறந்த பெண்ணின் வீட்டார் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #UttarPradesh
    Next Story
    ×