search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கு, வெறுப்பு என்பதே இல்லை - மானசரோவரில் இருந்து ராகுல் காந்தி தகவல்
    X

    இங்கு, வெறுப்பு என்பதே இல்லை - மானசரோவரில் இருந்து ராகுல் காந்தி தகவல்

    மானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovar
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் நிலை உருவானது.

    அப்போது அவர் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பி வேண்டினார். பின்னர் விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த தகவலை அவரே பின்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் வெளியிட்டார்.



    சிவபெருமானின் உறைவிடமாக போற்றப்படும் இந்த கைலாஷ் (கைலாய மலை) மற்றும் மானசரோவர் புனித ஏரி ஆகியவை, திபெத்துக்கு உட்பட்ட இமயமலை பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ராகுல் காந்தி கடந்த 31-ந் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் யாத்திரை புறப்பட்டார். தற்போது அங்கே தங்கியிருக்கும் அவர் மானசரோவர் ஏரியின் புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை. இதில் இருந்து யாரும் குடிக்கலாம்.

    இங்கு வெறுப்பு என்பதே இல்லை. எனவேதான் இந்தியாவில் நாம் இந்த தண்ணீரை வழிபடுகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    கைலாஷ் அழைத்தால் மட்டுமே ஒருவரால் அங்கு செல்ல முடியும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த வாய்ப்பை பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  #RahulGandhi #KailashMansarovar
    Next Story
    ×