என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் - தினகரன் பேட்டி
பெங்களூர்:
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலவை சந்தித்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சசிகலாவை நேரில் சந்தித்து பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று வெளியான தகவல் வெறும் வதந்திதான்.
தமிழகத்தில் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் விதமாக சோபியாவின் கைது சம்பவம் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்களுக்கு சகிப்புதன்மை கட்டாயமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கதகுந்த வகையில் இல்லை. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் அணுகுமுறை மிகவும் தவறானது. மத்தியிலும் எங்கள் ஆட்சி, மாநிலத்திலும் எங்கள் கிளை ஆட்சி என்ற ஆணவ போக்கு இதில் தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும். தமிழக எம்.பி.க்கள் ஆதரவை பெற்றுதான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துதான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும்.
தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட்கூட வாங்காது. விரைவில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வந்து விடும். ஆயிரம் தினகரன் வந்தாலும் சமாளிப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். முதலில் என்னை ஆட்சியாளர்களால் சமாளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #Sasikala #Dinakaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்