search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை - மேற்குவங்காள ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி
    X

    மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படவில்லை - மேற்குவங்காள ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி

    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக பேசிய ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி, மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்துக்கு கீழே சென்ற வாகனங்கள் மற்றும் ஆட்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் மேற்குவங்காள மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி பொதுப்பணித்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகம் தான் இந்த மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    Next Story
    ×