என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் பினராயி விஜயன்
Byமாலை மலர்2 Sep 2018 8:52 AM GMT (Updated: 2 Sep 2018 8:52 AM GMT)
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மூன்று வார காலம் சிகிச்சை பெறுவதற்காக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #pinarayivijayan
திருவனந்தபுரம்:
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #KeralaCMUStreatment
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனைக்கு வந்து சென்றார். அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், இம்மாதம் 3-ம் தேதி அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கேரள கவர்னரை நேற்று சந்தித்த பினராயி விஜயன், மாநிலத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PinarayiVijayan #KeralaCMUStreatment
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X