என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்
Byமாலை மலர்2 Sep 2018 5:08 AM GMT (Updated: 2 Sep 2018 5:08 AM GMT)
டெல்லியில் 7 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
புதுடெல்லி:
டெல்லியில் அதிதி கான் என்ற பெண்ணின் 7 மாத பெண் குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் தனது மகள் நீர்த்தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் அவரது நண்பருக்கு தகவல் அளித்து பிறகு மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும் தாய் அதிதி கான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், குழந்தையின் உடற்கூறாய்வில், கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிதி கானிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது குழந்தை பிறந்த பிறகு அடுக்கடுக்காக குடும்பத்துக்கு பிரச்சனைகள் வருவதாகவும், பிரச்சனைகளுக்கு குழந்தையே காரணம் என கருதியதாலும் குழந்தையை கொன்றதாக அதிதி கான் வாக்குமூலம் அளித்துள்ளார். 7 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
டெல்லியில் அதிதி கான் என்ற பெண்ணின் 7 மாத பெண் குழந்தை சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் தனது மகள் நீர்த்தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவர் மற்றும் அவரது நண்பருக்கு தகவல் அளித்து பிறகு மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும் தாய் அதிதி கான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், குழந்தையின் உடற்கூறாய்வில், கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிதி கானிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தனது குழந்தை பிறந்த பிறகு அடுக்கடுக்காக குடும்பத்துக்கு பிரச்சனைகள் வருவதாகவும், பிரச்சனைகளுக்கு குழந்தையே காரணம் என கருதியதாலும் குழந்தையை கொன்றதாக அதிதி கான் வாக்குமூலம் அளித்துள்ளார். 7 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X