search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் - கெஜ்ரிவால் அறிவிப்பு
    X

    டெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் - கெஜ்ரிவால் அறிவிப்பு

    குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AAPgovt #Delhidoorstep
    புதுடெல்லி:

    ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #AAPgovt #Delhidoorstep 
    Next Story
    ×