search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,100 கோடி வேண்டும் - உள்துறை மந்திரியிடம் குமாரசாமி வேண்டுகோள்
    X

    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.1,100 கோடி வேண்டும் - உள்துறை மந்திரியிடம் குமாரசாமி வேண்டுகோள்

    கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் நிதி வேண்டும் என மத்திய உள்துறை மந்திரியிடம் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மழை ஓய்ந்துவிட்ட நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் மத்திய அரசு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, முதற்கட்ட ஆய்வில் 3,435.80 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இது இடைக்கால ஆய்வில் கணக்கிடப்பட்ட தொகை என்றும், ஆய்வு முழுமையடைந்த பிறகு முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில துணை மந்திரி பரமேஸ்வரா, வருவாய்த்துறை மந்திரி தேஸ்பாண்டே, கூட்டுறவுத்துறை பண்டேப்பா காஷெம்புர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதற்கட்ட நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் எனவும், மத்திய ஆய்வுக்குழு சேதங்களை ஆய்வு செய்ய விரைவில் அனுப்பப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    Next Story
    ×