என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு பேரணி- பிரவீன் தொகாடியா அறிவிப்பு
Byமாலை மலர்30 Aug 2018 10:19 AM GMT (Updated: 30 Aug 2018 10:19 AM GMT)
ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளார். #PravinTogadia
பைசாபாத்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.
ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.
ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X