search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த புத்த மதகுரு கைது
    X

    பீகாரில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த புத்த மதகுரு கைது

    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கிவரும் புத்தமத பள்ளியின் குரு, சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். #Bihar #SexualAbuse
    பாட்னா:

    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கி வரும் பிரஜ்னா ஜோதி புத்த ஆரம்ப பள்ளி மற்றும் தியான மையத்தின் குருவாக செயல்படுபவர் பந்த் சுஜோய் அக சங்பிரியா பண்டே. இவர் சமீபத்தில் தியான மையத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவரின் பாதுகாவலர்கள் அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புத்த மதகுருவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். #Bihar #SexualAbuse
    Next Story
    ×