search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 2 நாள் ஒட்டுமொத்த விடுப்பு - வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
    X

    ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 2 நாள் ஒட்டுமொத்த விடுப்பு - வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

    ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 2 நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தால் நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி பணிகள் மட்டுமின்றி, முக்கிய வங்கிகளின் பணிகளும் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. #RBI #MassLeave
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், பணியாளர்களும் செப்டம்பர் 4 மற்றும் 5-ந்தேதிகளில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க உள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு, இதற்கு அழைப்பு விடுத்துள்ளது. சேமநல நிதி, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால், நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி பணிகள் மட்டுமின்றி, முக்கிய வங்கிகளின் பணிகளும் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. 
    Next Story
    ×