search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

    டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #FireWorks
    புதுடெல்லி:

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தைமார்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக் கல் செய்தனர். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சில இந்து அமைப்புகள் உள்பட சுமார் 100 பேர் இந்த வழக் குக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்தனர்.



    இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக, தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளக்கோரி கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் மூத்த வக்கீல் துருவ் மேத்தா நேற்று தனது இறுதி வாதத்தில், “மத்திய அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அவற்றை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

    மனுதாரர் தரப்பில் வக்கீல் சங்கரநாராயணன், “டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்து வடிவிலான வாதங்களை விரைவில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.  #SupremeCourt #FireWorks 
    Next Story
    ×