search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திராயன்-2 ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
    X

    சந்திராயன்-2 ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    Next Story
    ×