என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் - சரத்பவார்
Byமாலை மலர்28 Aug 2018 2:01 AM GMT (Updated: 28 Aug 2018 2:01 AM GMT)
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார். #sharadpawar #congress
மும்பை :
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பேசுகையில், “நாட்டின் பிரதமர் போட்டியில் தான் இல்லை என்றும், நாட்டின் பிரதமர் ஆகும் கனவு தனக்கு இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ராகுல் சாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசியதாவது:-
பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ராகுல்காந்தி அறிவித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் இவர்களை(பா.ஜனதா) அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். நாம் ஒன்றாக அரியணையில் அமரவேண்டும்.
அப்போது எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அவர்கள் பிரதமர் பதவியை கோரலாம்.
அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத பிராந்திய கட்சிகளுடன் இணைத்து தேர்தலை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் உள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே பிராந்திய கட்சிகளுடன் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு சரத்பவார் கூறினார். #sharadpawar #congress
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பேசுகையில், “நாட்டின் பிரதமர் போட்டியில் தான் இல்லை என்றும், நாட்டின் பிரதமர் ஆகும் கனவு தனக்கு இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ராகுல் சாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசியதாவது:-
பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ராகுல்காந்தி அறிவித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் இவர்களை(பா.ஜனதா) அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். நாம் ஒன்றாக அரியணையில் அமரவேண்டும்.
அப்போது எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அவர்கள் பிரதமர் பதவியை கோரலாம்.
அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத பிராந்திய கட்சிகளுடன் இணைத்து தேர்தலை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் உள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே பிராந்திய கட்சிகளுடன் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு சரத்பவார் கூறினார். #sharadpawar #congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X