search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் - உ.பி முதல்வருக்கு சர்ச்சை ஐபிஎஸ் அதிகாரி கடிதம்
    X

    பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் - உ.பி முதல்வருக்கு சர்ச்சை ஐபிஎஸ் அதிகாரி கடிதம்

    உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சூர்ய குமார் சுக்லா, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அவர் கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற இருக்கும் சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுக்லா எழுதியுள்ள கடிதத்தில், “பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என கூறியுள்ளார்.

    ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் ஓ.பி.சவுத்தரி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள அம்மாநில சட்டசபை தேர்தலில் அவர் அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×