search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    ஐதராபாத் நகரில் உணவகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கில் 42 உயிர்களை பறித்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும்  திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேரும் என மொத்தம் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  

    இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
    Next Story
    ×