என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி செய்கிறார்கள் - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி
Byமாலை மலர்27 Aug 2018 8:38 AM GMT (Updated: 27 Aug 2018 8:38 AM GMT)
காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #Kumaraswamy
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரனும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.
இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 3 மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்த சித்தராமையா மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று பேசினார். இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர். அவர்களது எண்ணம் பலிக்காது.
செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்-மந்திரி பொறுப்பேற்பார் என்று பா.ஜனதா கட்சியினர் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர். அதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன். முதல்-மந்திரி பதவியை பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன்.
எனது அரசு 100 நாட்களை கட்டாயம் நிறைவு செய்யும். பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் முதல்-மந்திரியாக இருக்கும் வரை என்னால் முடிந்தவற்றை செய்வேன். மக்கள் பணியே எனது இலக்காகும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy
கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரனும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.
இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 3 மாதங்களாக எதுவும் பேசாமல் இருந்த சித்தராமையா மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று பேசினார். இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரசை சேர்ந்த சிலரும், பா.ஜனதா கட்சியினரும் எனது அரசை கவிழ்க்க தொடர்ந்து சதி செய்கின்றனர். அவர்களது எண்ணம் பலிக்காது.
செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்-மந்திரி பொறுப்பேற்பார் என்று பா.ஜனதா கட்சியினர் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர். அதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன். முதல்-மந்திரி பதவியை பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யமாட்டேன்.
எனது அரசு 100 நாட்களை கட்டாயம் நிறைவு செய்யும். பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் முதல்-மந்திரியாக இருக்கும் வரை என்னால் முடிந்தவற்றை செய்வேன். மக்கள் பணியே எனது இலக்காகும்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X