search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் -  நிதிஷ் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் - நிதிஷ் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

    பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Nitishkumar #Congress
    பாட்னா:    

    பீகாரில் விபச்சார கும்பல் தங்கியிருந்த பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததற்கு அவர்கள் தான் காரணம் என கருதி அங்கிருந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமார் அரசில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக  மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கவ்காப் குவாட்ரி கூறுகையில், பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்றதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தால் பீகார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது உறுதியாக தெரிகிறது. எனவே, மாநில அரசி இனியும் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Nitishkumar #Congress
    Next Story
    ×