search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் - பல மாநில கவர்னர்கள் இடமாற்றம்
    X

    10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் கவர்னர் மாற்றம் - பல மாநில கவர்னர்கள் இடமாற்றம்

    ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நரிந்தர்நாத் வோஹ்ரா கவர்னராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டே வந்தது. சமீபத்தில் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனால், வோஹ்ரா கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

    பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர். 
    Next Story
    ×