என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இம்ரான்கானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் பேச்சுவார்த்தை குறித்து மோடி எதுவும் கூறவில்லை - மத்திய அரசு மறுப்பு
Byமாலை மலர்20 Aug 2018 10:47 PM GMT (Updated: 20 Aug 2018 10:47 PM GMT)
பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கானுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எதுவும் கூறவில்லை என்று மத்திய அரசு மறுத்து உள்ளது. #ImranKhan #NarendraModi
புதுடெல்லி:
பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது.
தேர்தலுக்கு பின் சிறு சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 18-ந் தேதி பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.
இதுபற்றி நேற்று முன்தினம் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேசி கூறுகையில், “பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இவ்வாறு கூறிய நிலையில் மத்திய அரசு இதை நேற்று மறுத்தது. மேலும் இம்ரான்கானுக்கு, பிரதமர் மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை முழுமையாகவும் வெளியிட்டது.
அந்த வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அண்டை நாடான பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் உறவை பராமரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ள விதமாகவும் இணைந்து செயல்படுவதை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. அதேநேரம், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதும் அவசியம் ஆகும்” என்று தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் கடிதத்தில் எந்த இடத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #NarendraModi
பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது.
தேர்தலுக்கு பின் சிறு சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 18-ந் தேதி பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.
இதுபற்றி நேற்று முன்தினம் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேசி கூறுகையில், “பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இவ்வாறு கூறிய நிலையில் மத்திய அரசு இதை நேற்று மறுத்தது. மேலும் இம்ரான்கானுக்கு, பிரதமர் மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை முழுமையாகவும் வெளியிட்டது.
அந்த வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அண்டை நாடான பாகிஸ்தானுடன் அமைதியான முறையில் உறவை பராமரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ள விதமாகவும் இணைந்து செயல்படுவதை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது. அதேநேரம், தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத செயல்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்துவதும் அவசியம் ஆகும்” என்று தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் கடிதத்தில் எந்த இடத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #NarendraModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X