search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து - பியூஷ் கோயல்
    X

    வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து - பியூஷ் கோயல்

    கனமழையால் தத்தளிக்கும் கேரள மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #Kerala floods
    புதுடெல்லி :

    கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்தநிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், ‘கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்’. #Kerala floods
    Next Story
    ×