search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை
    X

    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை

    வெள்ளச் சேதத்தால் தள்ளாட்டம் போடும் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளனர். #Keralaflood #Keralafloodrelief
    ஐதராபாத்:

    வரலாறு காணாத பேரழிவில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

    அவ்வகையில், ஆந்திர அரசில் பணியாற்றும் என்.ஜி.ஓ.க்கள் ( Non-Gazetted Officers) சார்பில் கேரளா அரசின் துயர் துடைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் 20 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் என அம்மாநில என்.ஜி.ஓ.க்கள் சங்கத் தலைவர் அசோக் பாபு இன்று தெரிவித்துள்ளார்.

    அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு இந்த தொகை அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிக்க ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் முன்வந்துள்ளது. #Keralaflood #Keralafloodrelief
    Next Story
    ×