என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள மழை வெள்ளத்தை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என அறிவித்த மத்திய அரசு
Byமாலை மலர்20 Aug 2018 1:08 PM GMT (Updated: 20 Aug 2018 1:13 PM GMT)
கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief
புதுடெல்லி:
கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய மழையால் அம்மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. 10 நாட்களாக பெய்த கன்மழையால் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மழை நின்று வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவை உலுக்கிய இந்த மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி மாநிலங்களவை செயலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேரள மழை வெள்ளத்தினை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X