என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் மற்றும் அரியானாவில் 3 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதைப் பொருள் பறிமுதல்
Byமாலை மலர்19 Aug 2018 8:37 PM GMT (Updated: 19 Aug 2018 8:37 PM GMT)
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடைபெற்ற இருவேறு சோதனைகளில் 3 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் :
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள வயல்வெளிப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து தூக்கி எரியப்பட்டு இந்திய எல்லையில் உள்ள வயலில் கிடந்த 2 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர். இதுதொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, அரியானா மாநிலம், குருகிராமம் பகுதியில் சந்தேகப்படும்படி உலவிய இரண்டு நைஜீரிய இளைஞர்களை அம்மாநில போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையுடைய ஹெராய்ன் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தென் ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப் பொருளை இந்தியவில் டெல்லி, குருகிராமம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விற்பனை செய்ய வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள வயல்வெளிப் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து தூக்கி எரியப்பட்டு இந்திய எல்லையில் உள்ள வயலில் கிடந்த 2 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர். இதுதொடர்பாக விசாரனை நடைபெற்று வருகிறது ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, அரியானா மாநிலம், குருகிராமம் பகுதியில் சந்தேகப்படும்படி உலவிய இரண்டு நைஜீரிய இளைஞர்களை அம்மாநில போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையுடைய ஹெராய்ன் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தென் ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப் பொருளை இந்தியவில் டெல்லி, குருகிராமம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விற்பனை செய்ய வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X