என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலுவுக்கு ஜாமீனை இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்18 Aug 2018 1:52 AM GMT (Updated: 18 Aug 2018 1:52 AM GMT)
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #LaluBail
பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால், ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இடையில், அவரது இளைய மகனும் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. அதற்காக 3 நாள் பரோலில் வெளியே வந்த லாலு பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், உடல்நலம் பாதிப்பு காரணமாக 6 வார காலம் ஜாமீன் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் காலம் ஜூன் 27-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணையின் போது ஜாமீனை ஜூலை 3-ம் தேதி வரை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நீட்டித்தது.
இந்நிலையில், தொடர் சிகிச்சையில் லாலு பிரசாத் யாதவ் இருப்பதால் அவரது ஜாமீனை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து கடந்த 10-ம் தேதி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணயில் மருத்துவ காரணங்களுக்காக லாலுவுக்கு வருகிற 27-ம் தேதி வரை மீண்டும் ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால், ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இடையில், அவரது இளைய மகனும் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. அதற்காக 3 நாள் பரோலில் வெளியே வந்த லாலு பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், உடல்நலம் பாதிப்பு காரணமாக 6 வார காலம் ஜாமீன் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் காலம் ஜூன் 27-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணையின் போது ஜாமீனை ஜூலை 3-ம் தேதி வரை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நீட்டித்தது.
இந்நிலையில், தொடர் சிகிச்சையில் லாலு பிரசாத் யாதவ் இருப்பதால் அவரது ஜாமீனை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து கடந்த 10-ம் தேதி ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணயில் மருத்துவ காரணங்களுக்காக லாலுவுக்கு வருகிற 27-ம் தேதி வரை மீண்டும் ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X