search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர் கைது
    X

    டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர் கைது

    டெல்லி விமான நிலையத்தில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர் கைது செய்யயப்பட்டுள்ளார். #CISF #IGI
    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நள்ளிரவு வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாக்சி ஒன்றை சோதனை செய்கையில், டாக்சியில் பயணம் செய்த இளைஞருக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

    அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த இளைஞர் திடீரென டாக்சி டிரைவரை தள்ளிவிட்டு டாக்சியை ஓட்டிசெல்ல முயற்சி முயன்றார். அப்போது, தடுக்கவந்த பாதுகாப்பு படையினர் இருவரை தாக்கிவிட்டு அவர்களின் துப்பாக்கியை எடுக்க அந்த இளைஞர் செய்துள்ளார்.

    அதற்குள், சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானத்தை பார்த்து இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் இளைஞரை மடக்கி பிடித்து அவரது கை மற்றும் கால்களை கட்டிபோட்டனர். பாதுகாப்பு படையினரால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #CISF #IGI
    Next Story
    ×