search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ள நிவாரண நிதி - தெலுங்கானா அரசு ரூ.25 கோடி, ஆந்திரப்பிரதேச அரசு ரூ.10 கோடி நன்கொடை
    X

    கேரள வெள்ள நிவாரண நிதி - தெலுங்கானா அரசு ரூ.25 கோடி, ஆந்திரப்பிரதேச அரசு ரூ.10 கோடி நன்கொடை

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக தெலுங்கானா அரசு ரூ.25 கோடி, ஆந்திரப்பிரதேச அரசு ரூ.10 கோடி நன்கொடை அறிவித்துள்ளது. #ChandrababuNaidu #ChandrashekarRao #KeralalRain #Keralafloods
    ஐதராபாத் :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஆந்திரப்பிரதேச மாநில அரசு சார்பில் கேரளாவிற்கு ரூ.10 கோடி வெள்ள நிவாரன நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

    முன்னதாக, தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதாக அறிவித்தார்.  #ChandrababuNaidu #ChandrashekarRao #KeralalRain #Keralafloods
    Next Story
    ×