search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் - முதல்-மந்திரி யோகி அறிவிப்பு
    X

    உ.பி.யின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் - முதல்-மந்திரி யோகி அறிவிப்பு

    உத்தரபிரதேசத்தின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    Next Story
    ×