என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் நிர்வாகப் பிரிவை திறக்க தடையில்லை - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
Byமாலை மலர்17 Aug 2018 7:43 AM GMT (Updated: 17 Aug 2018 7:43 AM GMT)
ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பிரிவை திறப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசு வைத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. #Sterlite #SterliteClosureOrderCase #NGT
புதுடெல்லி:
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழக அரசின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. #Sterlite #SterliteClosureOrderCase #NGT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழக அரசின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. #Sterlite #SterliteClosureOrderCase #NGT
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X