search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பங்கு மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் மீது  டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    பங்கு மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

    பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத் மீது பங்கு மோசடி வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #Vediocon #DelhiPolice
    பிரபல எலெக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனமான வீடியோகானின் அதிபராக வேணுகோபால் தூத் இருந்து வருகிறார். இவர் திருபாதி செராமிக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை சமீபத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால், அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பங்குகள் என்பதும், மறுவிற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் குற்றவாளியாக வேணுகோபால் சேர்க்கப்பட்டிருந்தார்.  இரண்டு ஆண்டுகளாக இதன் விசாரணை நடந்து வந்த நிலையில் இப்போது இந்த வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    மேலும், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத்,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டை சி.பி.ஐ., அமலாக்க பிரிவு, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Vediocon #DelhiPolice
    Next Story
    ×