search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேசத்தில் திடீர் வெள்ளம் - 11 பேர் பலி
    X

    மத்தியப்பிரதேசத்தில் திடீர் வெள்ளம் - 11 பேர் பலி

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.
    போபால் :

    மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேறியதால் சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஆற்றில் நீராடினர். ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில்  திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இதனால், ஆற்றின் நடுவில் இருக்கும் பாறைகள் மீது இருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 11 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 40-க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சூழ்ந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு குழுர ஈடுபட்டுள்ளது. இதுவரை, பாறைகளில் சிக்கித்தவித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



    ஆற்றில் வெளியேறும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மீட்பு பணிக்கு ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் வரை  வரவழைக்கப்பட்டது. ஆனால், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பாறைகளின் மீது சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உள்துறை மந்திரி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மீட்பு குழுவினருடன் தாம் நேரடி தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×