search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு தூக்கு - 3 நாளில் தீர்ப்பு வழங்கி சாதனை
    X

    சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு தூக்கு - 3 நாளில் தீர்ப்பு வழங்கி சாதனை

    மத்திய பிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்த 3 நாளில் வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக நரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதே தினத்தில் கைது செய்தனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபர் நரேசுக்கு சாகர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சுதான்சு சக்சேனா தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    மத்திய பிரேதச மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டசபையில் ஒருமனதாக மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து விசாரணையும் முடிந்து 3 நாளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது சாதனையாகும்.

    சாகர் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் வழக்கில் 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே கோர்ட்டில் கடந்த மாதம் இதே மாதிரியான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×