search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு
    X

    ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு

    ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். #IndependenceDayIndia #PMModi
    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், சாதனைத் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியா என்ற "தூங்கிக் கொண்டிருந்த யானை" தற்போது எழுந்துவிட்டது. உலக நாடுகளின் கவனம் இப்போது நம் பக்கம் திரும்பியுள்ளது. கோடி கோடியாக முதலீடு செய்யும் மையமாக இந்தியா மாறியுள்ளது. ஜிஎஸ்டி அமல் என்பது ஒரு வரலாற்று வெற்றி. விவசாயத்துறையில் இளைஞர்களை சாதிக்க வைப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட விவசாயிகளுக்கு நன்றி.

    மீன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது நாடாக திகழ்கிறது. வெறும் வாக்குறுதியாக மட்டுமே இருந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்படும். இந்த திட்டம் 50 கோடி இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும்.

    இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை இப்போது  அதிகரித்துள்ளது. புதிய விமான நிலையங்கள், சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. 2022-ல் சொந்த செயற்கை கோள் மூலம் இந்தியர்களை விண்ணுக்கு அனுப்ப முயன்று வருகிறோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பிய 4-வது நாடாக இந்தியா மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய அரசின் லட்சிய திட்டமான இந்த ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டமானது, ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #AyushmanBharat #AyushmanBharatScheme #PMModi #Modi
    Next Story
    ×