search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா மாநிலத்தில் பெண் வக்கீல் கற்பழிப்பு புகார் - நீதிபதி கைது
    X

    தெலுங்கானா மாநிலத்தில் பெண் வக்கீல் கற்பழிப்பு புகார் - நீதிபதி கைது

    தெலுங்கானாவில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கற்பழிப்பு செய்து விட்டதாக பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் நீதிபதி கைது செய்யப்பட்டார். #Telangana #JuniorCivilJudge
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

    இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.  #Telangana #JuniorCivilJudge 
    Next Story
    ×