search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நலத்திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டார் மோடி - ராகுல்காந்தி விமர்சனம்
    X

    மக்கள் நலத்திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டார் மோடி - ராகுல்காந்தி விமர்சனம்

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்மந்திரியும் நல்ல திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டதாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Modi #Telangana
    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில், இளைஞர்களின் பெருந்திரள் கூட்டத்தின் நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அந்த உரையில், உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    மோடியும், சந்திர சேகர் ராவும், முன்னேற்ற கனவுகள் குறித்து பேசி வருகிறார்கள் ஆனால், தெலுங்கானாவில் புதிய வரி விதிப்பும், போலீஸ் ராஜ்ஜியமும் மட்டுமே நடப்பதாகவும், பொதுமக்கள் பேச கூட அனுமதிக்கபடுவது இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    மேலும், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பே மக்களுக்கு இருந்த அனைத்து கனவுகளும் நிறைவேற்றப்படாமல் போனதற்கு முதல்மந்திரியின் குடும்பத்தினரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றாட உபயோக பொருட்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.



    இதையடுத்து, பிரதமர் மோடியைப் போலவே தெலுங்கானா முதல்மந்திரியும் பொய் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவருவதாகவும், ஊழல் தலைநகராக தெலுங்கான மாறிவிட்டதற்கு முதல்மந்திரியின் குடும்ப அரசியலே காரணம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    மேலும், ரபேல் திட்டத்தை தலைகீழாக மாற்றியதன் மூலம், மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு பல லட்சம் கோடிகளை பரிசாக வழங்குகிறார் என்றும், இதேபோல், காங்கிரஸ் அரசால் 38 ஆயிரம் கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தெலுங்கானா நீர்ப்பாசன திட்டத்தை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்மந்திரி மாற்றியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். #RahulGandhi #Modi #Telangana
    Next Story
    ×