search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் உருகுலைந்த கேரளா - ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து என அரசு அறிவிப்பு
    X

    கனமழையால் உருகுலைந்த கேரளா - ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து என அரசு அறிவிப்பு

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி வருவதால், மக்கள் துன்புற்று இருக்கும் நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #Onam
    திருவனந்தபுரம்:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரூ.100 கோடி உடனடியாக அனுப்பப்படும் என அறிவித்தார். முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் பினராயி விஜயனும் கோரிக்கை விடுத்திருந்தார்.


    ஓணம் கொண்டாடம் (கோப்புப்படம்)

    இந்நிலையில், கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார். 
    Next Story
    ×