search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சூர் அருகே பக்கெட்டில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி
    X

    திருச்சூர் அருகே பக்கெட்டில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி

    திருச்சூர் அருகே பக்கெட்டில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்காஞ்சேரி எடமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். இவரது மனைவி சஜினா. இவர்களது 1 ½ வயது மகள் பாத்திமா. நேற்று மாலை சஜினா சமையல் செய்தார். சுக்கூர் வெளியே சென்றார். குழந்தை பாத்திமா அங்கு விளையாடியது.

    சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற சுக்கூர் வீட்டிற்கு வந்தார். மகளை தேடியபோது காணவில்லை. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவரும் தேடினார். அங்கு விளையாடிய குழந்தை மாயமானது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடினர். வீட்டின் பின்புறம் பார்த்தபோது அங்குள்ள பக்கெட்டில் குழந்தை விழுந்து கிடந்தது.

    மயங்கிய நிலையில் மீட்டு குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பாத்திமா பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து வடக்காஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×