என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அழகான ஆபத்து - மும்பை கடற்கரைகளில் ஜெல்லி மீன்கள் தாக்குதலில் 150 பேர் காயம்
Byமாலை மலர்11 Aug 2018 6:16 AM GMT (Updated: 11 Aug 2018 6:16 AM GMT)
மும்பை கடற்கரைகளில் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்குவதால், கடற்கரையில் பொழுது போக்குவதற்காக வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் காயமடைந்தனர். #BluebottleJellyfish #JellyfishAttack #MumbaiBeaches
மும்பை:
பொதுவாக ஆழ்கடலில் காணப்படும் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள், அரிதாகவே கடற்கரைகளுக்கு வரும். இந்த மீன்கள் தாக்கினால் மனிதர்களுக்கு கடுமையான சொறி, ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஜுகு, அக்சா, கிர்கான் கடற்கரையில் இதுபோன்ற ஜெல்லி மீன்கள் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபற்றி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் மும்பை கடற்கரைக்கு ஜெல்லி மீன்களின் வருகை வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை அதிகமான அளவு ஜெல்லி மீன்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய அளவில் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். #BluebottleJellyfish #JellyfishAttack #MumbaiBeaches
பொதுவாக ஆழ்கடலில் காணப்படும் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள், அரிதாகவே கடற்கரைகளுக்கு வரும். இந்த மீன்கள் தாக்கினால் மனிதர்களுக்கு கடுமையான சொறி, ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மும்பை கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன. கடலில் குளித்தவர்கள் இந்த மீன்களின் தாக்குதலில் சிக்கி உள்ளனர். இந்த மீன்களால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அறியாத சிலர், கடற்கரையில் ஒதுங்கிய மீன்களைத் தொட்டு விளையாடி உள்ளனர். இதனால் அவர்களுக்கும் ஒவ்வாமை, அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஜுகு, அக்சா, கிர்கான் கடற்கரையில் இதுபோன்ற ஜெல்லி மீன்கள் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபற்றி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் மும்பை கடற்கரைக்கு ஜெல்லி மீன்களின் வருகை வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை அதிகமான அளவு ஜெல்லி மீன்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய அளவில் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். #BluebottleJellyfish #JellyfishAttack #MumbaiBeaches
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X