என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
Byமாலை மலர்11 Aug 2018 1:55 AM GMT (Updated: 11 Aug 2018 1:55 AM GMT)
ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை :
பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரும் ஜெயிலில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு காரணமாகவும் ஜெயிலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரபல டி.வி. சேனலின் முன்னாள் அதிகாரியான இந்திராணி முகர்ஜி கடந்த 2015-ம் ஆண்டு தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்திராணி முகர்ஜி உள்பட 3 பேரும் ஜெயிலில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு காரணமாகவும் ஜெயிலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X