search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி தலைமை செயலாளரை பதவியிலிருந்து நீக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    டெல்லி தலைமை செயலாளரை பதவியிலிருந்து நீக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

    டெல்லி தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #DelhiAssembly #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், துணை நிலை ஆளுநரின் முட்டுக்கட்டை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

    சமீபத்தில் டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பல திட்டங்களை ஆம் ஆத்மி அரசு விரைவு படுத்தியுள்ளது. தூசி படிந்து கிடந்த சிசிடிவி திட்டத்துக்கு கடந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால், அம்மாநில தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷ் சிசிடிவி திட்டத்தின் மீதான கேபினட் ஒப்புதல் முடிவு மிக அவசரமானது என குறிப்பு அனுப்பினார். இதன் காரணமாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக புகார் அளித்து அன்ஷு பிரகாஷ் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×