என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்
Byமாலை மலர்9 Aug 2018 11:06 AM GMT (Updated: 9 Aug 2018 11:06 AM GMT)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.#DMKLeader #Karunanidhi
புதுடெல்லி :
வயது மூப்பு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்று முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, அவரது மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாள் முழுதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு பாராளுமற்ற இரு அவைகளும் இரங்கல் தெரிவித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் உள்பட மத்திய மந்திரிகள் இரண்டு நிமிடங்கள் அமைதியாக எழுந்து நின்று கருணாநிதிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதாக மத்திய ம்ந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #DMKLeader #Karunanidhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X