search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே கல்லூரி மாணவர் கொலை
    X

    திருப்பதி அருகே கல்லூரி மாணவர் கொலை

    திருப்பதி அருகே கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். #Murdercase

    திருப்பதி:

    திருப்பதியை சேர்ந்தவர் ஜானி (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு திருப்பதியை அடுத்த காஜுல மண்டியம் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கிரிக்கெட்மட்டையால் தாக்கிக்கொண்டனர். அப்போது எதிர் தரப்பைச் சேர்ந்த சிலர் கத்தியால் ஜானியை குத்தினர். இதில் நிலை குலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை, சக நண்பர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜானி இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து காஜுலமண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிக்கெட் விளையாடிய இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×