என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்5 Aug 2018 1:26 AM GMT (Updated: 5 Aug 2018 1:26 AM GMT)
கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் மத்திய அரசின் கடிதம் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது. #NiravModi
புதுடெல்லி :
வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள. அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக கடந்த 1993-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்த கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளை அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசின் கடிதம் முறைப்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X