search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக அசாம் போலீஸ் நிலையங்களில் மம்தா மீது புகார்
    X

    சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக அசாம் போலீஸ் நிலையங்களில் மம்தா மீது புகார்

    அசாம் குடிமக்கள் பதிவேடு பிரச்சனையை மையமாக வைத்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக மாநிலத்தில் 3 போலீஸ் நிலையங்களில் மம்தா பானர்ஜி மீது புகார்கள் பதிவு செய்ப்பட்டுள்ளது. #NCR #FIRagainstMamata
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். 

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் அம்மாநில சட்டசபை உறுப்பினர் உள்பட சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, சமீபத்தில் டெல்லி சென்றபொது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிதார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த பிரச்சனையால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என மத்திய அரசை எச்சரித்தார்.

    இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு பிரச்சனையை மையமாக வைத்து, மக்களிடையே வெறுப்புணர்னை விதைப்பதாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும்,  மாநிலத்தில் 3 போலீஸ் நிலையங்களில் மம்தா பானர்ஜி மீது புகார்கள் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் உள்ள கீதாநகர், ஜகி ரோடி மற்றும் கோலாஹட் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அந்த புகார்களின் அடிப்படையில் இன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. #NCR #FIRagainstMamata 
    Next Story
    ×