என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சி பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் - மக்களவையில் திரிணாமுல் எம்.பி.க்கள் அமளி
Byமாலை மலர்3 Aug 2018 7:40 AM GMT
அசாமில் கட்சி பிரமுகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து திரிணாமுல் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. #MonsoonSession #NRCBill #TMC
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பதிவேட்டில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிட்டனர்.
அசாமில் நுழைய முயன்ற திரிணாமுல் காங். உறுப்பினர்களை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மக்களவைவை சிறிது நேரம் ஒத்திவைத்தார். #MonsoonSession #NRCBill #TMC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X