search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்
    X

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - சி.ஆர்.பி.எப் வீரர் மரணம்

    தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் பரிதாபமாக மரணம் அடைந்தார். #MilitantAttack #CRPF
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் நைரா கிராமத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. சி.ஆர்.பி.எப். வீரரான இவர் நேற்று தனது வீட்டின் அருகில் சென்றபோது, பயங்கரவாதிகள் சிலர் இவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



    காஷ்மீரில் தாயாரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு போலீஸ் அதிகாரியை விடுவித்த 24 மணிநேரத்தில், பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரரை சுட்டுக் கொன்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MilitantAttack #CRPF

    Next Story
    ×