என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐயப்பன் அருளால் மீண்டும் கர்நாடக முதல்வர் ஆனேன் - கேரளாவில் குமாரசாமி நெகிழ்ச்சி
Byமாலை மலர்28 July 2018 12:51 PM GMT (Updated: 28 July 2018 12:51 PM GMT)
தீவிர ஐயப்ப பக்தனான தனக்கு ஐயப்பன் அருளினால் மீண்டும் முதல்வர் பதவி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #HDKumaraswamy
திருவனந்தபுரம் :
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றதை சிறப்பிக்கும் விதமாக கேரள மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஐயப்பனின் அருளினால் தான் மீண்டும் முதல்வரானதாக தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் உடன் சபரிமலைக்கு சென்ற தன் முந்தைய சபரிமலை பயணங்களை நினைவு கூர்ந்த அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும் ஐயப்பன் அருளினால் 2006-ம் ஆண்டே தாம் முதல்வரானதாகவும் கூறினார்.
மேலும், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாமலேயே தற்போது மீண்டும் கர்நாடக முதல்வராகியிருப்பதற்கு ஐயப்பன் அருள் தான் முக்கிய காரணம் என குமாரசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #HDKumaraswamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X