search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் செம்மரம் வெட்டிய 4 தமிழர்கள் கைது - வானத்தை நோக்கி போலீசார் சுட்டதால் பரபரப்பு
    X

    ஆந்திராவில் செம்மரம் வெட்டிய 4 தமிழர்கள் கைது - வானத்தை நோக்கி போலீசார் சுட்டதால் பரபரப்பு

    ஆந்திராவில் செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandalwood
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் சிலர் செம்மரம் வெட்டுவதாக போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் செம்மரங்களை வெட்டியவர்கள் போலீசார் மீது கற்களால் தாக்குதல் நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு செம்மரம் வெட்டிய நான்கு தமிழர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் பலர் அங்கிருந்து தப்பியோடினர். கைதானவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
    Next Story
    ×